lundi 18 décembre 2017

நான்காரைச் சக்கரம் 1


சித்திர கவிதை
நான்காரைச் சக்கரம்[வேறு]
  
மார்கழி மாதே! மலரே! வருவாயே!
சீர்பொழி வாயே! மனமே செறிவாயே!
மாயவனின் நற்சீர்மை வார்ப்பாயே! பேரமுதத்
தாயே! புகழெலாம் தா!
  
இது நான்கு ஆராய், நடுவே 'ம' என்னும் எழுத்து நிற்க, குறட்டில் நான்கு எழுத்துகள் நிற்க, ஆரையின் மேல் நந்நான்கு எழுத்துக்கள் நிற்க, சுற்று வட்டத்தில் இருபத்தெட்டேழுத்துக்கள் பொருந்தப் பாடப்படும் கவியாகும்.
  
54 எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் 49 எழுத்துக்களாகச் சுருங்கும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire