mercredi 5 avril 2017

வஞ்சித்தாழிசை



வஞ்சித் தாழிசை
  
[ஒரே பொருளைப் பற்றி மூன்று வஞ்சித்துறைகள் பாடினால் வஞ்சித்தாழிசை ஆகும்]
  
ஈசன் திருவடி! [ தேமா + காய்]
  
1.
தில்லைத் திருக்கூத்தன்
முல்லை அடி..தொழுவாய்!
எல்லை இலாத்துயரம்
இல்லை இனியென்பாய்!
  
2.
சூடும் அரும்வாழ்வை
ஆடும் திருத்தாள்கள்!
பாடும் மனமோங்கி
நாடும் பெரும்வீடே!
  
3.
தேங்கும் வினைதீர்க்கும்
ஓங்கும் திருப்பாதம்!
ஏங்கும் மனமேவ
நீங்கும் தொடர்பிறவி!

---------------------------------------------------------------------------------------------
  
அடிமறி வஞ்சித்தாழிசை!
  
[ஒரு பாட்டின் நான்கு அடிகளை இடம் மாற்றி வைத்தாலும் பொருள் வரும் வண்ணம் அமையவேண்டும்]
  
என்னெஞ்சே! [ தேமா + புளிமாங்காய்]
  
1.
பித்தம் தெளியாதோ?
நித்தம் துயர்ஏனோ?
சித்தம் அறியாதோ?
கத்தும் வலியேனோ?
  
2.
துன்பம் விலகாதோ?
இன்பம் படராதோ?
அன்பும் மலராதோ?
மன்னும் வலியேனோ?
  
3.
நாட்டும் பழியேனோ?
கூட்டும் பகையேனோ?
மூட்டும் வெறியேனோ?
வாட்டும் வலியேனோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire