lundi 3 avril 2017

வஞ்சித்துறை - 3

திருமகள்
வஞ்சித்துறை [தேமா + கருவிளம்]
  
1.
பொற்றார் புகழ்மகள்
நற்றார் நறுமனம்
சொற்றார் கவியெனைப்
பற்றா[து] இருப்பதோ?
  
2.
தேனார் திருமகள்
மீனார் வியன்விழி
கானார் கவியெனை
ஏனோ வெறுப்பதோ?
  
3.
மின்னும் மலர்மகள்
மன்னும் பெருவளம்
கன்னல் கவியெனக்[கு]
இன்னல் அளிப்பதோ?
  
4.
சீர்சேர் செழுமகள்
தார்சேர் திருவடி!
பேர்சேர் கவியெனைக்
கார்சேர் விடுப்பதோ?
  
5.
கண்ணன் மனத்தினில்
நண்ணும் நலமகள்!
பண்ணன் எனக்கருள்
ஒண்ண மறுப்பதோ?
  
6.
பூவார் பொழின்மகள்
துாவார் அணிவகை
பாவார் கவியெனை
மேவா[து] இருப்பதோ?
  
7.
எந்தை இறையிடம்
விந்தை பொழிமகள்!
முந்தை வினையனென்
சிந்தை தொழுதிடும்!
  
8.
ஊழின் துயர்பல
சூழும் நிலையிலும்
தாழும் எனதுயிர்
ஆழும் திருவையே!
  
9.
அன்னை நினைவினில்
என்னைக் கரைக்கிறேன்!
பொன்னை நிகர்மனந்
தன்னை அடைகிறேன்!
  
10.
எண்ணம் இனித்திடும்
வண்ணம் வடித்திடும்!
விண்ணின் வியன்மகள்
கண்ணுள் கமழ்கிறாள்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.04.2017

2 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. உரக்கப் படித்துப் பார்த்தேன்
    தமிழின் இனிமை புரிந்தது
    அருமை அய்யா
    தொடர்கிறேன்
    தம

    RépondreSupprimer