vendredi 31 mars 2017

விருத்தமேடை - 3



விருத்த மேடை - 3

அறுசீர் விருத்தம்  - 3
[காய் + காய் + காய் + காய் + மா + தேமா]

என்னினத்தைக் கீழ்த்தள்ளி ஏமாற்றி வாழ்ந்ததெலாம்
      இறந்த காலம்!
வன்னினத்தை அறியாமல் வாய்ப்பேச்சி மாயங்கள்!
      வறண்ட காலம்!
பொன்னினத்தைப் புவியாண்ட புகழினத்தைப் பிரித்தாண்ட
      பொய்யர் காலம்!
தன்னினத்தைக் காத்திடவே தமிழிளைஞன் கண்திறந்தான்
      தழைக்கும் வாழ்வே!
  
இப்பாடல் "காய் + காய் + காய் + காய் + மா + தேமா" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
    
இலக்கணம் நுாற்பா
  
முதனான்குங் காயாகிப் பின்னவை,மா தேமாவாய்   
முடியு மன்றே   
      - விருத்தப் பாவியல் [3]
  
"இளையோர் அணி விழித்தெழுகவே "  என்ற தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.02.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire