mardi 10 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 5

என்னாசிாியா் தமிழ்மாமணி பாவலா்மணி சித்தன் ஐயாவுடன்


 புதுவைப் பெரும்புலவா் சந்தப்பாமணி அரங்க. நடராசனார் ஐயாவுடன்


 தனித்தமிழ்த் தொண்டா் தமிழ்மண் இளவழகனார் ஐயாவுடன்

முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனார் ஐயாவுடன்

 திரைப்பட இசையமைப்பாளர் சௌவுந்தா் ஐயாவுடன்

திரைப்பட இயக்குநா் செல்வமணி ஐயாவுடன்

கவிஞா் மாலதி, கவிஞா் கீதா, கவிஞர் சுவாதி ஆகியோருடன்

கவியாழி கண்ணதாசன், கவிஞர் தென்றல் சசிகலா, சசிகலா இளையமகன் இனியன் மற்றும் எதிா்வீட்டுப் பிள்ளைகளுடன்

  தந்தையும் தாயும்

22 commentaires:


  1. தந்தையின் சீரேந்தித் தாயின் சிறப்பேந்திச்
    சிந்தையை ஈர்க்கும் செழுங்கவியே! - விந்தையென
    உன்றன் பணியாவும் ஓங்கி ஒளிர்கிறது!
    இன்பத் தமிழை இசைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்னே பதிந்துள்ள முத்தான வெண்பாட்டு
      தன்னே ரிலாமல் தரும்சுவையே! - என்னேவுன்
      பற்றுள்ளம்! பண்புள்ளம்! பாச்செல்வா உன்றமிழைக்
      கற்றுள்ளம் காணும் கனவு!

      Supprimer
  2. அத்தனைப் படங்களும் அருமையாய் இருக்க
    எத்தனைக் கண்கள் வேண்டும் எனக்கு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அத்தனை எத்தனை ஆகா கவியாழி
      முத்தெனத் தந்தார் மொழி!

      Supprimer
  3. படங்கள் ஒவ்வொன்றும் பாட்டரசர் பணியினை சிறப்பாக காட்சிப்படுத்துகின்றன. வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சசிகலா வந்திங்குச் சாற்றும் கருத்து
      வசியமாய் ஆக்கம் வளைத்து!

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா.

    பிறந்த தேசத்தில் முத்த மிட்ட மண்ணில்
    பாதத்தில் திருவடிகள் இல்லாமல்
    பாசத்தால் இணைந்த சொந்தங்களின்
    படங்களை இரசித்தேன்
    அதில் தாயும் தந்தையும் மிக மிக அழகு
    தந்தையின் கட்டு மீசையும் திடம் கொண்ட பார்வையும்
    என்னை வியக்கவைத்தது.. த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உச்சிமேல் என்னை உவக்கின்ற தாயுள்ளம்
      அச்சுதன் தந்த அருள்!

      Supprimer
  5. தங்களின் ஆசிரியரை சந்தித்து புகைப்படம் எடுத்திருப்பது சிறப்பினும் சிறப்பு ஐயா.
    கில்லர்ஜி
    தமிழ் மணம் 5

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆசான் அளித்த அருமைத் தமிழாலே
      வீசும் புகழே விளைந்து!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      படங்களைக் கண்டு பரவசம் கொண்டீர்!
      தொடர்ந்து வருவீர் சுடர்ந்து!

      Supprimer
  7. உங்களது பயணப்பதிவுகளைத் தொடர்ந்து படித்து, பார்த்து வருகிறேன். முந்தைய ஒரு பதிவில் நான் கூறியதுபோல முழுமையாகத் தாங்கள் நேரத்தைப் பயன்படுத்தியதறிந்து மகிழ்ச்சி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முனைவர் அருளிய முத்தான சொற்கள்
      இனியவை என்பேன் இசைத்து!

      Supprimer
  8. படங்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
    அதுவும் தாங்கள், தங்களின் தாய் தந்தையுடன் எடுத்துக் கொண்டபடம்
    தங்களின் தந்தையின் கண்களில் தெரியும் பெருமிதத்தையும், தாயின் கண்களில் தெரியும் அன்பையும் பாருங்கள்
    மகிழ்ந்தேன் ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னையே எண்ணி இருக்கின்ற தாய்தந்தை
      பொன்னையே ஒத்துள்ளார் பூத்து!

      Supprimer
  9. பலரை மீண்டும் கண்டத்தில் மகிழ்ச்சி... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்டு படைத்திட்ட கன்னல் தமிழமுதை
      உண்டு மகிழ்ந்தேன் உடன்!

      Supprimer
  10. தங்களை சந்திக்க முயன்றும் முடியவில்லை... அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக சந்திப்போம் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சரவணன் வந்திங்குச் சாற்றிய சொற்கள்
      அரும்மணம் ஊட்டும் அகத்து!

      Supprimer
  11. thanks for our photos...but my name is swathi and my husband name selvakumar...i think u forgotten to write our names...thanks for your visit and affection

    RépondreSupprimer